|
Share this post:
|
நடிப்பு : கிஷோர் , ஸ்மிதா , சம்பத் , சத்யன் இசை : ரோஹித் குல்கர்னி. இயக்கம் : பாண்டி சரோஜ் குமார் படத்தின் நாயகன் கிஷோர் தாய்லாந்தில் வளர்ந்து வரும் தமிழ்ர். தாய் விபத்தில் சிக்கி உயிர்விடுகிறார் இவருக்கும் க்ண்பார்வை பறிபோகிறது. கண்ணில்லாமல் சத்தத்தைவைத்து வாழ பழகிக்கொள்கிறார் கிஷோர். பெரிவன் ஆனதும் கிஷோர் இந்தியாவிற்கு வருகிறார். ஆந்திராவில் உள்ள கவுபாய் கூட்டத்தில் சம்பத் நாயகியை திருமணம் செய்ய விரும்ப, நாயகி தப்பித்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் கிஷோர் நாயகியை காப்பாற்றினாரா ? நாயகியை திருமணம் செய்தாரா என்பது தான் படத்தின் கதை. நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் கிஷோர். ஒரே அடி எதிரி கதை முடிந்தது என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. நாயகி ஸ்மிதா ஒரே ஓட்டமாகத்தான் உள்ளார். சத்யன் சரியாக காமெடி பண்ணி சிரிக்கவைக்கிறார்.ஆனாலும் கண்ணில்லாமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் கொஞ்சம் ஒவராத்தான் இருக்கு. எல்லா இடத்திலேயும் சத்தத்தை வைத்து கண்டுபிடிக்கும் நாயகன் சில இடங்களில் எதிரிகளை கோட்டை விடுகிறார். மற்றபடி காட்சி அமைப்பு பிரமாதம். இரண்டு கலரில் பல வித்தைகளை காட்டியுள்ளார்ஒளிப்பதிவாளர். இசையில் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார் குல்கர்னி ஆனால் பிரமாதமாக இல்லை. மொத்தத்தில் போர்க்களம் கிஷோர்க்கு சரியான ஆடுகளம்.போர்க்களம்



About
Contact